கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடாத்த தடை!

5d7709de 48449e00 department of examination 850x460 acf cropped
5d7709de 48449e00 department of examination 850x460 acf cropped

ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களையும் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு முதல் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை செய்யப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.