சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனை குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியம் வரை குறைவடையுமாயின் அவ்வாறானவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.