இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 90 சதவீதமானவை விற்பனை:சம்பத் மெரிஞ்சிகே!

Temporarily Holding Vehicles and Other Non Essential Items
Temporarily Holding Vehicles and Other Non Essential Items

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிலோன் ஓட்டோ மொபைல் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது நாட்டில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.