கடற்படை தளபதியை சந்தித்தார் கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம்!

r
r

இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நேற்று (29) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்திருந்தார்.

அங்கு ஓய்வு பெற உள்ள இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவுக்கு கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.