இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகள் குறைக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் .
இலங்கையில் வாகனங்களை தயாரிக்கும் நோக்கிலேயே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி வாகன இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது
அத்துடன், இந்தத் திட்டத்தின் ஊடாக பாரிய அளவிலான அந்நிய செலாவணியை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது நாட்டில் வாகனப் பற்றாக்குறை ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்