சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!

சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளையுடைய வீடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய வீடுகள் மற்றும் இடங்களை வரைபடத்திற்கு உட்படுத்துவதே இதன் நோக்கம் என சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் மட்டுப்படுத்தபடுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.