நாட்டின் பாதுகாப்பினூடாக சுற்றுலாத்துறை மேம்பாடு

Gotabaya Rajapaksa
Gotabaya Rajapaksa

தனது ஆட்சியின் கீழ் இலங்கையை பாதுகாப்பான நாடாக மாற்றம் பெறச்செய்ததன் பின்னர் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை நகரில் நேற்று (07) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டை பாதுகாப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க முடியும் எனவும் தொழிலின்றி இருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.