மைத்திரிக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

25 2
25 2

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது. 

இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரித்தியோக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமரசிங்க தெரிவித்துள்ளார்.