நீர்வேலியில் தனுரொக்கின் நண்பன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று தனுரொக்கின் நண்பன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (30) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழு வாள்கள், கம்பிகள் கொண்டு இத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.