கெஹெலியவுடன் இணைத்து வடக்கிற்கு வருகிறார் வியாழேந்திரன் !

j.
j.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆகியோர் (02) நாளைய தினம் வடமாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் .

இதன் பொது அவர்கள் அங்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு மக்கள் நலன் வேலைத் திட்டங்களை அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் நாளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் 25ஆவது ஊடகப்பிரிவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதுதொடர்பான நிகழ்வுகளில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன் , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.