நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னெடுப்பதா? அல்லது ஒத்திவைப்பதா?

Parliment 720x450 1
Parliment 720x450 1

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எமது செய்திச் சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.