தென்மராட்சி, வரணி பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரணி அந்தோனியர் தேவாலய கிணறு துப்பரவு செய்யும் போது கிணற்றிற்குள் இருந்து இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.