பொதுமக்களுக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

picture8
picture8

ஒக்டோபர் 12, 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகத்திற்கும் பொது மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அலுவலக நேரங்களில் (மு.ப. 8 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரை) கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்கப்படுகின்றனர்.

கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060, 070-7101070

குடியுரிமைப் பிரிவு 070-7101030

வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு – 011-5329233, 011-5329235

வீசா பிரிவு – 070-7101050

dcvisa@immigration.gov.lk acvisa1@immigration.gov.lk acvisa2@immigration.gov.lk acvisa@immigration.gov.lk

துறைமுகப் பிரிவு – 077-7782505