ரிசாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டது சிறந்த தீர்மானம்-கெமிலஸ் பெர்னாண்டோ!

yazh news
yazh news

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிகழ்த்திய உரையானது உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கொழும்பு மறை மாவட்டத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை கெமிலஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்ய மேற்கொண்ட தீர்மானம் சிறந்த தீர்மானம் ஆகும் என அவர் உரை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.