தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டவாறு நாளை நடக்கும்- பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Grade 5 Exam Students 1
Grade 5 Exam Students 1


2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை (11) நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

“புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சிங்கள மொழியில் 2 இலட்சத்து 48 ஆயிரத்து 72 மாணவர்களும், தமிழ் மொழியில் 83 ஆயிரத்து 622 மாணவர்களும் தோற்றுகின்றனர்.

கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்குத் தேர்வுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.