‘கொரோனா’ சிகிச்சைகளுக்காக கிழக்கில் 4 வைத்தியசாலைகள்!

Eastern Sri Lanka
Eastern Sri Lanka


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு சுகாதார அமைச்சு மாவட்டம் தோறும் குறைந்தது ஒவ்வொரு வைத்தியசாலைகளைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 4 வைத்தியசாலைகளைக் கொரோனாத் தொற்றுக்கான சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்து பணிப்புரை வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் இன்று தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்தற்கான வைத்தியசாலை மேலும் தேவைப்படுகின்றது. இதற்கமைய நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் மேலும் வைத்தியசாலைகளை கொரோனாத் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளைத்  தெரிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளை மாற்றுவதற்கு அமைச்சு தெரிவு செய்து பணிப்புரை வழங்கியுள்ளது.

அதேவேளை, நாட்டில் மேலும் கொரோனாத் தொற்று அதிகரித்தால் மேலும் வைத்தியசாலைகளைக் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.