மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்இந்த சம்பவம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.
இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற 3 வது மரணமாக இது பதிவாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையும் 16 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.