டெங்கு நோயின் தாக்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஒருவர் மரணம் !

1574316259 7997
1574316259 7997

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்இந்த சம்பவம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.

இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற 3 வது மரணமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையும் 16 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.