அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு பிற்போடப்பட்டுள்ளது

teachers union 1
teachers union 1

அதிபர், ஆசிரியர்களால் வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கழிமை முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து ணிப்புறக்கணிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அதிபர், ஆசிரியர் தொடர்பான சம்பளப் பிரச்சினை தொடர்பாக விரைவாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பள ஆணைக்குழுவுக்கும், கல்வி அமைச்சுக்கும் தான் எழுத்துமூலம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.