நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் , திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம், குருணாகல், மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு நாளை வியாழக்கிழமை பகல் 1.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைந்தளவான மழை வீழ்ச்சியே காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.