சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நாட்டில் கொரோனா வைரஸால் அதிக ஆபத்துள்ள பகுதிகளை வரைபடமாக வெளியிட்டுள்ளது.
குறித்த வரைபடமானது பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
குறித்த தரவுகள் கடந்த 14 நாட்களில் எடுக்கப்பட்ட எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.