முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுபிரதேச செயலாளர் பகுதியில் இயங்கிவந்த நீராவிப்பிட்டி வாராந்த சந்தையினை இடம்மாற்ற எடுத்த நடவடிக்கையினால் வர்த்தகர்களுக்கும் பிரதேச சபையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 15.10.2020 நேற்று தவிசாளர் க.தவராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நீராவிப்பிட்டி வாராந்த சந்தையினை அதே இடத்தில் தற்காலிகமாக இயங்க சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 18 பிரதே சபை உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களின் ஆதரவுடனும் கையெழுத்து வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்று நீராவிப்பிடிட்டி வாராந்த சந்தை வியாபாரிகளால் தவிசாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.