20வது திருத்தத்தை நிறைவேற்றி கொள்ள அரசு கடும் முயற்சி என்கிறார் சஜித்!

Untitled 1p 1
Untitled 1p 1

அரசாங்கம் தமது ஏகாதிபத்திய அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் சட்டவிதிமுறைகளில் மக்களுக்கு ஒரு நீதியும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் போராட்டத்தை மேற்கொள்கின்றார்கள்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விடயங்களாக இருக்கின்றன’ என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.