ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கு தடை

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.