மல்யுத்த போட்டியில் தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே மரணம்!

மெக்ஸிகோவில் மல்யுத்த போட்டியின் (wrestling) போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்ற ரெஸ்லிங் போட்டியின் போது லூயிஸ் ஏஞ்சல் (Luis Angel)என்பவர் தனது போட்டியாளரான ரெடிமிடோவை (Redimido) முகத்திலும் வயிற்றிலும் உதைத்தார்.

அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாரான போது ரெடிமிடோ திடீரென மேடையிலேயே மயங்கிச் சரிந்தார்.

அப்போது போட்டி நடப்பதாகக் கருதிய ரெடிமிடோவின் நண்பர் ஒருவர் லூயிசைத் தாக்கினார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் ரெடிமிடோ உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.