மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது விசேட சுற்றிவளைப்பு :பலர் கைது!

தேடுதல்
தேடுதல்

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 98 பேர் உட்பட ஐஸ் ரக போதைப் பொருள் மோசடியுடன் தொடர்புடைய 19 மற்றும் கஞ்சா போதைப்பொருள் மோடியுடன் தொடர்புடைய 44 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் வழங்கியுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.