ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட எல்லைப்பகுதியில் அங்காடி வியாபாரத்தை தடை செய்ய நடவடிக்கை!

1584936813 9401
1584936813 9401

தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட எல்லைப்பகுதியில் அங்காடி வியாபாரத்தை தடை செய்ய அட்டன் டிக்கோயா நகரசபை மாதாந்தக்கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிபிரதேச வர்த்தகர்களும் நகரசபை எல்லைப்பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மாதாந்த சபையமர்வின் போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதாக சபைத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தீபாவளி பண்டிக்கைக்கு கொழும்பு உள்ளிட்ட வெளிமாட்டங்களிலிருந்து பிரவேசிக்கும் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகள் நகருக்கு பிரவேசிப்பதை கட்டுபடுத்தும் வகையில் தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி கோரிக்கை மனுவொன்றை இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு கையளிக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.