வார இறுதிநாட்களில் ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்படும் அஜித் ரோஹன தகவல் !

625.500.560.350.160.300.053.800.900.160.90 10 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 10 3

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதிநாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 44 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு வார இறுதியில் பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வளைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.