அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள்!

opoyi Fe AjoNgu
opoyi Fe AjoNgu

அம்பாறை- கல்முனை பிராந்தியத்தில் 9பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 9பேரின் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகியமையை தொடர்ந்தே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

பெலியகொட மீன் சந்தையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிய 8பேருக்கும் மற்றுமொரு நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்முனை, பொத்துவில், நிந்தவூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.