20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குறித்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது அவசியமென அஸ்கிரிய மகா விஹாரய அத்தியாயத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.