வடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை மிரட்டியதன் விளைவாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.