திறக்கப்படுகிறது ரஜரட்டை பல்கலைக்கழகம்

rajarata
rajarata

வைரஸ் காய்ச்சலின் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிருவாகம் அறிவிவித்துள்ளது.

விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.