பிறந்து 13 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா!

ஹப்புத்தளை கொஸ்லாந்தை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த சம்பவம் தொடர்பில், பொதுசுகாதார பரிசோதகர் தெரிவிக்கையில் குழந்தையின் தாத்தா பேலியகோடை சந்தையுடன் தொடர்புடையவர்.

அத்தோடு குறித்த குழந்தையின் தாய், தந்தை, மற்றும் பாட்டி ஆகியோரும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அண்மையில் கம்பஹாவில் இருந்து கொஸ்லந்தை பகுதிக்கு சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.