வைத்தியசாலையில் பிறந்த குழந்தைய விட்டுவிட்டு தாய் தப்பியோட்டம்

Tamil News large 2562689
Tamil News large 2562689

மட்டக்களப்பு வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றை பிரசுவித்த தாய் குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.


மட்டு பேதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் பெண் குழந்தையை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக வைத்தியாலை நிர்வாகம் நேற்று திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளதாக மட்டுதலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர் 

 சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் குழந்தை பிரசுவிப்பதற்காக கடந்த செட்டெம்பர் மாதம் 20 ம்திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்தது அந்த குழந்தை எடை குறைவு காரணமாக கண்ணாடிப் பெட்டியில் வைத்து வைத்தியர்களின் கண்காணிப்பில் தாயார் குழந்தையை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ம் திகதி வைத்தியசாலையில் இருந்த குழந்தையின் தாயாரை காணாமல் போயுள்ளார் அவரை வைத்தியசாலையில் தேடியபோது அவர் காணாமல் போயுள்ளார் அவர் வீட்டிற்கு சென்று திரும்புவார் என வைத்தியர்கள எதிர்பார்த்தனா். ஆனால் அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு வராமல் போயுள்ளார் இதனையடுத்து குறித்த குழந்தையை விட்டுவிட்டு தாய் தப்பியோடியுள்ளார் என தெரியவந்தது 
இதனையடுத்து இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த தாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்