கிராண்ட்பாஸ் அடுக்குமாடி வளாகத்தில் 16 பேருக்கு கொரோனா!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.

வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனைவரையும் தங்களின் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.