புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட துஆப் பிராத்தனை நேற்று சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கலாசார மத்திய நிலையத்தின் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜனாப் ஐ.எல்.றிஸ்வான் அவர்களின் தலைமையில் இவ்விஷேட துஆப் பிரார்த்தனை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவையும் துஆப் பிராத்தனையையும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த
மெளலவி அஷ்-ஷேய்க் ,ஏ. எச் .நெளசாத் (இஹ்ஸானி) நிகழ்த்தினார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள், கலாசார மத்திய நிலைய அங்கத்தவர்கள் மற்றும் மகல்லா வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.