மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று !

d1869381 3e692fd4 covid 19 850x460 acf cropped
d1869381 3e692fd4 covid 19 850x460 acf cropped

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வர்தக நிலையத்தில் கடமையாற்றி வரும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்தையடுத்து அவரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவரின் குடும்பங்களைச் சோந்த 3 பேருக்கு தொற்று இன்று வெள்ளிக்கிழமை (06) கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் 50 பேராக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த நபர் செங்கலடியில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார் இந்த நிலையில் அங்கு கொழும்பில் இருந்து வந்தவர்கள் சென்றுள்ளதாகவும் இதனையடுத்து அவருக்கு நேற்று வியாழக்கிழமை எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பிரிசோதனையில் தொற்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் 14, வயது. 16 வயது பிள்ளைகள் மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது

இதனையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்