நாட்டில் கடந்த 2 வாரத்தில் மாத்திரம் 16 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

GMOA2 1
GMOA2 1

இலங்கையில் கடந்த 2 வாரத்தில் மாத்திரம் 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரையில் 12,570 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் புதிதாக இனங்காணப்பட்ட383பேருடன் சேர்த்தே இந்த தொகை அதிகரித்ததாவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 168 பேர் கொழும்பு மாவட்டத்ததையும், 157 பேர் கம்பஹா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,096 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 7,048 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 6,623 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,918 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது