வவுனியாவில் அதிக விலையில் அரிசி விற்பனை!

download 3 3
download 3 3

அரிசிக்கான விலைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசி வகைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் வேண்டுகோளுக்கமைய அவித்த மற்றும் அவிக்காத சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 94 ரூபாவாகவும், அவித்த நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 92 ரூபாவாகவும், வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 89 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரிசியின் வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலைகளில் அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அரிசி ஆலைகளும் அதிக விலைகளுக்கே வர்த்தக நிலையங்களுக்கு அரிசிகளை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.