ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று!

samayam tamil 2
samayam tamil 2

ஐயாயிரத்து 600இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குரகொட ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொழிற்சாலையில் பணியாற்றும் இன்னும் இரண்டாயிரம் பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளிவரவுள்ளதாக ஹொரணை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் பி.சி.சேனாரத்ன தெரிவித்துள்ளார்.