கேரள ஆளுநர் ஆரீப் முகம்மது கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, கேரளாவில் 83 ஆயிரத்து 324 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நிலையில், மூன்று இலட்சத்து 88 ஆயிரத்து 504 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
அத்துடன், ஆயிரத்து 640 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.