மேலும் 265 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா!

images 4
images 4

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 265 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 317 ஆகவும், சுய தனிமைப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1447 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுய தனிமைப்படுத்தலை முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆகவும், தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை 1424 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.