கொழும்பு – மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடப்பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிரவரும் திங்கட்கிழமை முதல் மெனிங் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதிசுமக்கும் பணியாளர்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் இன்னும் மேற்கொள்ளப்படாதவர்கள் இருப்பின் அது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான காவல்நிலையத்திற்கு அறிவிக்கமுடியும் என காவல்துறை ஊடப்பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.