நாளைய தினமும் இடியுடன் கூடிய மழை தொடரும்!

51c0f8c7 images 3 1
51c0f8c7 images 3 1

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (15.11.2020) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.