நாளைய தினத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இதுவரைக்கும் 3905 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3771 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 84 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.