விசாரணை அறிக்கையை இன்றே கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

55 1
55 1

கொரோனா பிரண்டிக்ஸ் கொத்தணி விசாரணை தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் சட்டமா அதிபரால் பதில் காவல்துறை மா அதிபரிடம் 2020 நவம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் கோரியிருந்த முன்னேற்ற அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் குறித்த அறிக்கையை இன்றைய தினம் (18.11.2020) கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.