மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை

ec
ec

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடந்த வெள்ளியன்று அறிவித்திருந்த நிலையில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.