பிறந்த குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி

1604153940 death 2
1604153940 death 2

முல்லைத்தீவு மாவடடத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இருட்டுமடுவினை சேர்ந்த 36 அகவையுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு வரப்பட்டு நேற்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.