யாழ் சாவகச்சேரி காவல்துறை பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன்
இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாகவும், அந்த வாள்ளை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில்இவர்கள் சாவகச்சேரிப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் களை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.