மக்களுக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று

போரில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், மரணமடைந்த நாளை மையப்படுத்தி, 1989ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும், மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுத்திரண்டு அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக முன்னிலையாகி தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

மேலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு உறவினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், இந்தமுறை தத்தமது வீடுகளில் இருந்து பொதுமக்கள் மாவீரரை நாளை அனுஷ்டிக்குமாறு, தமிழ் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் ஒன்றாக அறிவுறுத்தியுள்ளன.