நாட்டுக்குள் நீர் வழங்கல் திட்டங்களை மிகவும் திறம்பட கொண்டு செல்வதற்கு எதிர்வரும் வருடத்தில் புதிதாக 264 நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நூற்றுக்கு 40 சதவீதமான அளவே நீர் வழங்கல் திட்டங்கள் காணப்படுவதாகவும், இதனை 78 சதவீதமாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.